RCH ID Registration கர்ப்பிணி பெண்கள் முதல்ல இதைத்தான் செய்ய வேண்டும்

Image
              இந்தப் பதிவை உங்கள் வீட்டில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மூன்று மாதத்திற்குள் RCH ID என்ற ஒரு ID கிரியேட் செய்ய வேண்டும். RCH ID Reproductive and Child Health RCH ID என்பது தனிநபருக்கு ஆதார் அட்டை எவ்வாறு உள்ளது அதுபோல கர்ப்பிணிகளுக்கு RCH ID Number என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எதற்கு RCH ID கிரியேட் செய்ய வேண்டும்?      நமது தமிழக அரசு கர்ப்பிணி பெண்களின் நிலையை குறித்து அறிவதற்காகவே இந்த RCH ID துவங்கி உள்ளனர்.அரசு மருத்துவமனையிலோ அல்லது தனியார் மருத்துவமனையிலோ கர்ப்பிணி பெண்கள் தங்கள் நிலையை காண்பித்தாலும் இந்த RCH ID என்பது மிகவும் கட்டாயமான ஒன்றாகும்.இதன் பலன்கள் குழந்தை பிறப்பிற்கு பின்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எளிதில் பெற முடியும் RCH ID இருந்தால் மட்டும் போதும். அதுமட்டுமல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். RCH ID Create செய்வதற்கு தேவையான...

காப்பீட்டு திட்டம் - ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)


காப்பீட்டு திட்டம் - ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)

இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை கொண்டுவந்தது. 2015ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

மத்திய அரசின் இந்த காப்பீட்டு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கக் கூடியதாகும். முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்படும். பாலிசி காலத்திலேயே பாலிசிதாரருக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு கிடைக்கும்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். அதிகபட்சம் 55 வயதில் இத்திட்டம் முதிர்வடைந்து விடும். இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகை ரூ.436

கிளைம் செய்வது எப்படி?

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் இணைந்த ஒருவர் திடீரென இறந்துவிட்டால், அவரது நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

கிளைம் செய்வதற்கான விண்ணப்பத்தை நாமினி வாங்கியபிறகு, அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைந்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த பிறகு அதை சம்பந்தப்பட்ட வங்கி சரிபார்க்கும். இதன் பிறகு வாடிக்கையாளர் சார்பாக, டிஸ்சார்ஜ் பில், கிளைம் படிவம், இறப்பு சான்றிதழ், கேன்செல் செக் போன்றவை வங்கி சார்பாக காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பப்படும்.

கிளைம் சரிபார்ப்பு முடிந்தபின்னர் காப்பீட்டுப் பணம் வங்கிக் கணக்கில் வந்துவிடும். இதற்கு 30 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும்.


Comments